My world according to me

Sunday, March 15, 2015

நான் அவளை விவாகரத்து செய்கிறேன்..

எனக்கு அப்போது வயது 11 அல்லது 12 ஆக இருக்கும். வருடம் 85 அல்லது 86 ஆக இருக்கும். எங்கள் வீடு தஞ்சாவூரின் மத்திய பகுதியிலிருந்து தென்மேற்கில் தஞ்சை மருத்தவக்கல்லூரிக்கு அருகே இருக்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதியாக அப்போதைக்கு இருந்தது. எங்களது குடியிருப்பில் வருவாய் துறை அதிகாரிகளே அதிகமாக இருந்தனர். அதிகாரிகள் பலர் சேர்ந்து கூட்டாக வாங்கினர். மிகக் குறைவான வீடுகளே அக்கம் பக்கத்தில் இருந்தது. இன்று அந்த வளர்ச்சி முற்றுபெற்றுவிட்டது என்று எண்ணுகிறேன். எங்கள் வீட்டிலிருந்து வடக்காக போனால் தமிழகத்தின் மிகப் பிரபலமான லெக்‌ஷ்மி சீவல் ஃபேக்ட்ரி இருக்கிறது. வெற்றிலை தாம்பூலத்திற்கு பெயர் போன லெக்‌ஷ்மி சீவல்! தெற்கே போனால் கூட்டுறவு வங்கி காலனி இருக்கிறது. எங்களது வீட்டிற்கு நேர் எதிரே அரசு (அரிசி மற்றும் பாமாயில்) பாதுகாப்பு கிடங்கு ஒன்று கொஞ்சம் உள்ளடங்கி அப்போதுதான் கட்டிக் கொண்டு இருந்தனர். பிரதான சாலைக்கும் அரசு கிடங்கிற்க்கும் இடையில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடியானவர்கள் பலர் குடிசைக் கட்டி வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரதான வேலையே கட்டிடம் மற்றும் கேணி கட்டுமான பணி. சிலரது வீட்டுப் பெண்மணிகள் வீட்டு வேலைக்கும் சென்றனர். சிலர் ரிக்‌ஷாவும் ஓட்டினர். சிலர் பின்னாளில் அந்த அரசு கிடங்கில் மூட்டை தூக்கும் வேலையும் செய்தனர்.

வீட்டிற்கு அருகே குமரன் தியேட்டர் இருக்கிறது. குமரன் தியேட்டர் ஒரு மாடர்ன் outlier. மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்கள் அங்கேத்தான் திரையிடப்படும். எனக்கு அந்த குடியானவர்களின் சராசரி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவ்வப்போது அவர்களின் கலாச்சாரம் என்னில் காணலாம். குறிப்பாக இரவு இரண்டாம் காட்சி பார்ப்பது அவர்களது கலாச்சாரம். நானும் 10 மணிக்கு மேல் திரைப்படம் அவ்வப்போது கண்டது உண்டு! திங்கள் முதல் சனி வரை அயராது உழைப்பார்கள். சனிக்கிழமை குமரனில் இரவுக் காட்சி களைக் கட்டும். குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்றால் கூட்டத்திற்கு அளவே இல்லை. வார நாட்களில் இரவு இரண்டாம் காட்சி இந்த குடியானவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பழகுவதற்கு இனிமையானவர்கள். நான் பல முறை அவர்களது இல்லங்களுக்கு போயிருக்கிறேன். அன்போடு இருப்பதை உபசரிப்பார்கள்.

மழை பொழியும் ஐப்பசி மாதங்களில் இவர்களது கட்டுமான பணிகள் பாதிக்கும். அப்போது இவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் பளிங்கு, பம்பரம், சூது விளையாடுவார்கள். குறிப்பாக காற்று வீசும் நாட்களில் பட்டம் விடுவார்கள். மாஞ்சா தடவி, பட்டம் விடுவதில் அவர்கள் அனைவருக்கும் ஒரு ஈடுபாடு உண்டு. கபடி விளையாடுவதிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு அவர்களுக்கு. சிலம்பம் சுழட்டுவதிலும் கைத் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

அந்த அரசு கிடங்கின் வாயிலில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. அந்த கடையிலிருந்துதான் இவர்கள் பெரும்பாலும் காலை உணவை வாங்குவார்கள். சொம்பு தளும்ப தேநீர் (டீ). 25 காசுகளுக்கு ஒரு பன் கிடைக்கும். ஒருவருக்கு ஒரு பன்.. ஒரு கிளாஸ் டீ. இதுதான் அவர்களது காலை உணவு. மதிய உணவாக பழைய சோறே. இரவு மட்டுமே சமைப்பார்கள். எஙகள் வீட்டு திண்ணையிலிருந்து இவர்கள் இரவு சமைக்கும் உணவிலிருந்து வரும் நறுமணம் அருமையாக இருக்கும். பின்னாளில் இவர்கள் இருந்த பொறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு கொடுத்ததில் எனது அப்பாவின் பங்கு அதிகம். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஒரு முறை தஞ்சை வந்த போது அவர்களுக்காக பேசி பட்டா வாங்கிக் கொடுப்பதில் எனது தந்தையின் பங்கும் உண்டு. அதனால் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

என்னதான் அந்த குடியானவர்கள் நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்களது குடும்பத் தலைவர்கள் பெரும்வாரியானவர்கள் குடிக்கு அடிமையாக இருந்தனர். இன்று எனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிவதே அவ்ர்கள் மூலம்தான். குடித்துவிட்டு பிரதான சாலையில் உரக்க அனைத்து கெட்ட வார்ததைகளையும் உபயோகிப்பார்கள். என் அம்மாவிடம் அதன் அர்த்தம் நான் கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. பிறகு நானாகவே புரிந்து கொண்டேன். என் அப்பாவோ மற்ற வருவாய் துறை அதிகாரிகளோ பிரதான சாலையில் சென்றால் அமைதியாக இருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒரு தலையாரி ஒருவர் இருக்கிறார். அவருக்கு இவர்கள் எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். என்ன பிரச்னை என்றாலும் அவரிடம்தான் முதலில் செல்லும். அவர் எடுக்கும் முடிவு இறுதியானது. அவரும் பெரும்பாலும் பாராபட்சமின்றி இருந்தவர்.

ஒரு நாள் கடைக்குச் சென்று கொண்டிருந்தவனை தலையாரி கூப்பிட்டார். ‘தம்பி அய்யப்பு, இங்க வாப்பா’ என்றார். எனக்கு கொஞ்சம் உதறல்தான். எதுக்காக என்னைக் கூப்பிடுகிறார் என்ற எண்ண ஓட்டமே ஒடியது. ‘ரெண்டு நிமிஷம் கொடுத்தீங்கனா, வீட்டுக்கு தேவையானத வாங்கிக் கொடுத்திட்டு, வீட்ல சொல்லிட்டு வர்றேனே. இல்ல அவசரமா’ என்றேன். அவர், ‘இல்ல தம்பி, நீ உன் வூட்டு ஜோலிய முடிச்சிட்டே வா’ என்றார். அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு போகும் வரை, ‘என்னவாக இருக்கும்’ என்ற எண்ணோட்டமே மேலோங்கியது.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தலையாரி வீட்டு வாசலுக்குச் சென்றேன். ‘வாப்பா அய்யப்பு. இப்படி உக்காரு’ என்றார். அங்கே ஒரு கணவனும் மனைவியும்  உட்கார்ந்திருந்தனர். மனைவியின் மடியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் இருந்தது. தலையாரி என்னிடம், ‘தம்பி, ஒரு மனு எழுதணும். நல்லா தெளிவா எழுதணும். நீ நல்லா எழுதுவேனு எனக்கு நம்பிக்கையிருக்கு. எழுதி தருகிறாயா’ என்றார். எனக்கு என்னமோ ஏதோ என்று பதறியவனுக்கு அது சற்று எளிதான வேலையாகத் தோன்றியது. ‘அதுக்கென்ன.. எழுதிட்டா போச்சு அய்யா’ என்றேன்.

கணவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும் என்றான். அதற்கு தலையாரி காரணம் கேட்டார். அவன் சொன்னதின் சாராம்சம் இதுதான். ‘என்னை மதிக்கிறதே இல்லை. எனக்கு நல்லதா சமைச்சு போடுறதே இல்லை. எனக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க மாட்டேங்கிறா. எப்ப பார்த்தாலும் பூண்டில இருக்கிற அவங்க அம்மா வூட்டுக்கு போறா. எனக்கு அவள புடிக்கல. அவள நான் விவாகரத்து செய்றேன். தலையாரி நீங்கத்தான் எனக்கு இத முடிச்சு கொடுக்கணும்’ என்றார். அந்த கணவன் சொல்லும் எலலாவற்றுக்கும் அந்த மனைவி சிரித்து கொண்டிருந்தாள் . எனக்கு அன்று புரியவில்லை. தலையாரி என்னிடம் என்ன எழுதவேண்டும் என்று சொன்னார். அழகாகத் தெளிவாக எழுதிக் கொடுத்தேன். கைநாட்டு இட்டார்கள் இருவரும். மனைவி சிரித்துக் கொண்டே அனைத்தையும் செய்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அனைத்தையும் அம்மாவிடம் சொன்னேன். முடிவில் ’விவாகரத்து என்றால் என்ன அம்மா?’ என்று கேட்டேன். அம்மா எனக்கு புரிய வைத்தாள். எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. இதற்கா நான் துணைப் புரிந்தேன்? முடியாது என்று சொல்லியிருந்தால் அவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்றே எண்ணினேன். என்னை நானே நொந்தேன்.

அடுத்த நாள் வாரயிறுதி. குடும்பத்துடன் நாங்கள் ஏதோ ஒரு திரைப்படத்துக்குச் சென்றோம். அங்கே நான் கண்ட காட்சி.. திரையில் அல்ல.. நிஜத்தில்.. என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே கணவனும் மனைவியும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தனர். எனக்கு பல வருடங்களுக்குப் புரியவில்லை. விவாகரத்து கேட்டவர்கள் பிரிந்து இருக்கவேண்டும் அல்லவா? எப்படி பிரியாமல் இருக்கின்றனர்? அதற்கு பிறகு அவர்களுக்கு இன்னொரு குழந்தையும் பிறந்தது. அவர்கள் பிரியவில்லை. பல வருடங்களுக்கு எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.

வருடங்கள் ஓடியது. இப்போது கல்லூரிக்குப் போய் கொண்டிருந்தேன். ஒரு நாள் தலையாரி என்னைக் கூப்பிட்டார். ’தம்பி இங்க வாப்பா’ என்றார். அதே கணவனும் மனைவியும். அதே நாடகம். இப்போது எனக்கு புரிந்தது. நம்பர் கடையில் தலையாரியும், கணவனும் சாராயம் குடித்திருந்தனர். இருவரும் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது இருந்தனர். ஏழை, படிப்பறிவு இல்லை என்றாலும் அந்த மனைவியின் உறுதி என்னை இன்று வரை வியப்பில் ஆழ்த்துகிறது. நண்பர்கள் சிலர் நேற்று காரடையான் நோன்பு கொண்டாடுகிறார்கள். இந்த குடியானவர்கள் அதனை கொண்டாடி நான் பார்த்தது இல்லை. இருப்பினும், அவள் தெளிவாக இருக்கிறாள். அவள் மீது எனக்கு மரியாதை அப்போது வந்தது. இன்று பல மடங்காக கூடியிருக்கிறது.

India's Daughter - my thoughts Part 2

When slum dog millionaire was released several of my friends hated it. I too hated it but on a different angle. Here's the reason! If two scripts were presented to Danny Boyle, one being the original slum dog millionaire script and the other being story of Viswanathan Anand, which one would he pick? Obviously the former. As a movie, slum dog millionaire was well made and deserved appreciation! Yes I digress here from others who still hate that movie.  A particular scene in slum dog millionaire really pin points our culture, how we suck the balls of cine actors and actresses. A boy going loo (poopoo) in a slum comes to know that Bachaan (India's superstar) is somewhere near. Eager to see him and to take autograph, he doesn't waste time.. jumps into shit and goes straight to take autograph. Danny Boyle clearly showed our flaws in our culture. Still now Indians are divided about this movie. Movie went on to show how kids are tortured and made to beg on the street. At the same time, south Indian director Bala directed a movie, "Naan Kadavul (I am God)." The movie had similar theme about helpless kids. No one objected or talked about it. That clearly showed that we can't take criticism from outside the country.



I agree (to an extent.. not everyone) most of the western media/world/people still think of us, as a snake charmer. As if we all raise a snake in our closet, worship and we play the magudi (an instrument played in front of snakes) everyday morning without fail. Sigh! Speaking of snakes, whenever I go to disneyland I avoid going into "It's a small world after all" ride. It's a ride sitting on a small boat. On the way you can hear the song of "It's a small world after all" repeatedly. The boat takes us to depictions of several country. For India, you can see a snake charmer :( Yes the eyes of western media/people are different. A skewed one if I may say.

Not long ago, NYT posted a sarcastic cartoon (after India successfully sent Mangalyaan to Mars) lambasting the NASA/European world. But the picture also had a farmer and a cow in it. It was not pleasing to many eyes. Indians took objections. I can understand the sentiment.




However, recent documentary "India's daughter" directed by Leslee Udwin doesn't fall into that category at all. Not even close!

  1. First, it didn't have any high decibel morons like Arnob and jokers as a panel in it. If Indians really want to object that's something un-Indian, it has to be talk shows like Arnob's.
  2. Second, documentary had view from victim's parents, victim's friend, Mukesh Singh, Delhi police commissioner, former Delhi CM Sheila Dikshit, Justice Leila Seth, and Oxford academic Maria Misra. Does it have any view of non-Indian? It is only the voice of the Indians? What is there to object? If it had voice of Brits and no Indians I can agree. What is un-Indian in this document really? Honestly if you can't understand this, it is evident that you are hiding behind an agenda.
  3. In my Part - 1 I have clearly stated that I was shocked at Mukesh and his lawyers' downtrodden thinking. Is that what bothers my fellow Indians? If yes, please tell me honestly if you agree with what they said. If yes, then I see why you vehemently oppose and want to be ban the documentary. If not, don't you think it needs to be discussed in public? Don't you realize your mistake? Will you pass on this negligence to your kids? Really?
  4. Lot of my friends ask this.. oh.. there are many victims.. why only Nirbhaya? My answer to them.. you are not seeing the big picture. It is not just about Nirbhaya. Only a spark is needed. This has to ignite and change things. If not, we are currently seeing a rape every 20 minutes. This will increase :(  You really want to see a rape a minute?
  5. Overall the documentary discusses the issue completely and ends with a good question.. "will Jyoti's sacrifice stop future rapes?" On a plantain leaf, a dheepam and few other things floating on a river. A fitting Indian end to the documentary. Do you need any more Indianess to the documentary?
  6. A common objection I see from people.. oh.. those crimes don't happen elsewhere? Can they speak about the crime in Australia, Antarctica, Saudi Arabia, Africa, Europe etc. My answer to them.. yes it happens all over the world not just India.. but in none of the places people responded like they did for Nirbhaya. It is quite unseen. If that happens elsewhere you can see all the media outlets jumping on it. Again I repeat it.. all media jumping on it. Why didn't "all media" jump in Delhi but only Leslie Udwin? Because they know India would object :) Understand this my fellow Indians, you are sensitive for something that we should condemn. It doesn't matter who brings the issue. Don't shoot the messenger!
  7. Another common assault.. these people allowed a white lady to enter into prison and take the documentary. How can they allow? Aren't you ashamed and silly saying that? How is it her fault? Isn't that your fellow Indians fault? Why take out on her being white? Really? You racist punk. Stop this menace.
  8. The rapist's lawyer says there are 250 sitting MPs who have a pending criminal record (rape or robbery or murder). If you are really taking objection against this documentary, did you hear what that lawyer said? It doesn't bother you? But this documentary bother you? Really?
  9. In the documentary police chief claimed that Delhi is safe as any other developed/developing nation's capital. Do you agree with that? Is that Leslie's statement? Isn't that our own police chief's statement? You don't want to object but object the documentary that brought this to us? Really?
If you are still convinced that the documentary will not do justice to Indian people, what is your agenda? What is right and what is wrong? Do you understand that basic?

"India's Daughter" - my thoughts!



Starting from 'Neel Akasher Neechey (1959)' to 'India's Daughter(2015)' India has always found reasons (or made up reasons) to ban movies/documentaries. We have a censor board (formed in 1952) to decide what is right and wrong for us! IMHO, it is a wayward solution. It is easy to influence a panel! About the panel and its shoddy operation is a story for another day!

'Indiana Jones and the temple of the doom' was banned initially by the censor board. Later the ban was lifted. And till today I have no idea why it was banned and more than that why it was lifted?! What really changed in between? Thinking of why it was banned gave me part of the answer why 'India's Daughter' was banned. India is not tolerant for criticisms from outside. Period! Remember why several Indians hated slum dog millionaire? Indians will appreciate only when their culture is being praised. A Washington-Post article praising Hindu mythology is welcome. But if that's questioned, we take complete offense to it! Especially it comes from the media of a country which has colonized us, it is going to be double whammy!  :)

No society can improve/progress without criticism. I have seen the documentary two times already. Personally, I see no objection. Yes it is painful to see what Mukesh Singh and the lawyers defending the rapists has to say. It is not their sobbing story but shows their retrogressive mindset. It is also the voice of the few Indians who are roaming freely amidst us. After all they are our people. It is our voice. It has to be heard to understand how silly it is. Let us be honest and introspect our culture. If not now, when are we gonna discuss it? Give a chance for the people to see the documentary and let it be the seed sown for the future.

Not very long ago, what Mukesh Singh said now, were the thoughts of our parents/grand parents. Let's not pretend that it ain't so. How long are we going to pretend that our culture is perfect and shields from all that's happening around us? Jyoti Singh gave her precious life to change this. It has to mean something. Every struggle she went through that night has to be paid for. It is time we all start to respect women.

Ok let's assume the documentary ban is lifted. What could happen? Is "all is well?" No. My understanding is, whatever riots are gonna happen would be a staged one. Not for the reason that the documentary came from BBC.. not for the reason that it gloats Mukesh Singh retrogressive thinking.. not for the reason that it devalues our Indian culture.. but the real reason would be that the lawyer for the rapist asked a very valid question. "If India wants to send a social message, they should start from their own neck. There are 250+ MPs who have pending criminal case that involves rape, murder, robbery." It is for that reason, it would be a staged one.

At end of the documentary victim's father asked, "My daughter has lit a candle asking how we are gonna solve these crimes and stop it forever?" How is India going to answer? Not just for her! For every twenty minutes, we have a new victim... for them :( It is a tough task ahead. It is even more tougher if we are hiding under false pretense.

Friday, March 13, 2015

லெக்‌ஷ்மியும் கன்னுக்குட்டியும்

பள்ளிக்கு போனக் காலத்துல கடைசி பரீட்சை எழுதி முடிச்சு வெளிய வந்ததும் வெள்ளை சட்டை பூரா இங்க்கா இருக்கும்! நம்ம கூட்டாளிங்க ரெண்டு பேனா வெச்சிருப்பானுங்க. ஒன்னுல பரிட்சை எழுத. இன்னொன்னுல இங்க்கும் வாழைத் தண்டு சாரும் கலந்து வெச்சிருப்பானுங்க. அந்த பேனாவால சட்டையில் இங்க் அடிச்சா, நம்ம சட்டை என்ன தொவச்சாலும் கறை போகவே போகாது. பரீட்சை முடிந்ததும் பள்ளியை விட்டு  வெளியே வந்ததும் தொடங்கும் இந்த இங்க் போராட்டம். சிலருக்கு சட்டையில் மட்டும்தான் இங்க். என்னைப் போன்ற மாவீரனுக்கு முகமெல்லாம் இங்க். ஒரு வ்ழியாக போர் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் வீட்ல டின்னு காட்டுவாங்க அம்மா! அப்படியே நாலு துணிமணிய ஒரு பையில அடைச்சு வெச்சு கிராமத்துல இருக்குற ஒரு வெட்டி பய இதுக்குனே இருக்கான், அவன் கூட பாட்டி வீட்டுக்கு அனுப்பி வெச்சிருவாங்க. அந்த வெட்டி பயக்கிட்ட காசக் கொடுத்துருவாங்க. நம்ம கையில கொடுத்த நாம தொலச்சிருவோமாம். அவன் பிசுனாரி பய, அம்மாகிட்ட எனக்கு ஃபுல் டிக்கெட்டுக்கு காசு கரெக்டா வாங்கிட்டு பஸ்ல போகும்போது அரை டிக்கெட் எடுத்துருவான். என்ன வேற நிமிர்ந்து உக்காராதனு அதட்டுவான். நிமிர்ந்தா உயரம் தெரிஞ்சிரும்ல. அப்படி மிச்சம் புடிச்ச காசுல அன்னிக்கு சாயங்காலமே நம்பர் கடையில தண்ணிய போட்டு பாட்டி வூட்டுக்கு வந்து ’உங்க மருமக ஒன்னும் சரியில்ல ஆச்சி.. மரியாதையே தெரியல அவங்களுக்கு. காஃப்பி தண்ணி கூட கொடுக்கல.’  நான் மனசுக்குள்ள் , “நாதாரிப் பய.. அம்மா வெச்ச வெண்பொங்கல முழுசா துண்ணுட்டு வாய் கிழிய பேசுது பாரு பக்கி பண்ணாடை” திட்டிக்குவேன். என் பாட்டியும் `அவ எப்பவுமே இப்படித்தான். பெரியவங்களையே மதிக்கிறது இல்ல. இதுல உன்ன மதிச்சிட போறாளாக்கும். இந்தா இந்த ரெண்டு ரூவாய வெச்சுக்க. வேற என்ன சங்கதி?’ பிசுனாரி பய இந்த ரெண்டு ரூவாவுக்கு எங்க அம்மாவ பொரணி பேசுது. இவன என்ன பண்ணலாம்.. வுடுங்க அப்புறம் ஒருநாள் அவன் கோவணத்துகுத் தீ வெச்ச கதை சொல்றேன்.

பாட்டி வூட்ல பாட்டியும் சித்தப்பாவும் மட்டும்தான். கிராமத்துக்குள்ள நுழைஞ்சதும், பாட்டி வீடுதான் மொத வீடு. பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துலயே வீடு. பாட்டி வீடு சுத்தியும் மரங்கள். எந்த கோடைக்கு போனாலும் பாட்டி வீடு சிலு சிலுனு இருக்கும். வெளிய சுட்டெரிக்கும் வெயில். வீட்டுக்குள்ள ஃபேனே தேவையில்ல. நைட்டு நல்லா குளிரும். பெரிய திண்ணை. திண்ணைல பெரிய மேஜை, நாற்காலி, பேடு, மூணு கலர் பேனா, பேப்பர் வெயிட்டு, கத்தையா பேப்பரு எல்லாம் இருக்கும். தாத்தா அந்த காலத்துல ஊருக்கு கணக்குபுள்ள. தாத்தா இருந்த வரைக்கும் காலைல ஊர் ஜனங்க யாராவது வந்து தாத்தவ மனு எழுதிக் கொடுக்க சொல்லுவாங்க. அவரும் பொறுமையா எழுதிக் கொடுப்பாரு. பாட்டிக்கு நல்ல காது. திண்ணைல சொல்றத அடுப்படில உக்காந்து கேப்பா. ‘அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’னு லைவ் micro blogging லெவலுக்கு comment கொடுப்பா. தாத்தா போய் சேர்ந்தப்புறம் சித்தப்பா இந்த வேலைய செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்படியே வய வாய்க்கா தோப்புனு பொழுத ஓட்டிக்கிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்டு இருக்காரு சித்தப்பா!

பாட்டி அருமையாக சமைப்பாள். அதைவிட பிரமாதமாக காஃப்பி போடுவாள். பாட்டி வீட்டில் மாடு இருப்பதால் எந்த நேரம் காஃப்பி கேட்டாலும் கிடைக்கும். பாட்டி வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதுக்கு காரணம், வீட்டுக்கு பின்னாடி பெரிய கொல்லப்பக்கம். அதுக்கும் பின்னாடி ஒரு அழகான குளமிருக்கு. கொல்லைப்புறத்தின் முடிவில் ஒரு பூவரசம் மரமிருக்கு. அதன் கிளைகள் எறுவதற்கு லகுவாக இருக்கும். அருகில் குளம் என்பதால் அந்த மரம் குளத்தின் மீது தவழ்ந்து படர்ந்திருக்கும். அதோட கிளையிலிருந்து குளத்துள்ள குதிக்கலாம். கொல்லைப்புறத்தின் நடுவே பெரிய மாட்டுத் தொழுவம். தொழுவத்தின் பின்பக்கம் வைக்கோல் போர் இருக்கும். கறவைக்கு ரெண்டு மாடு. வயலுக்கு ரெண்டு மாடு. நாலு ஆடு, ஆட்டுக்குட்டிங்க். அஞ்சாறு கோழி, ஒரு சேவ, ஒரு நாய், பத்தாதுக்கு ஒரு பூனை இருக்கு. இது போதாதா ஒருத்தனுக்கு? எனக்கு இந்த வாயில்லா பிராணிகள் எல்லாத்துக்கிட்டயும் பாட்டி மாதிரியே பேசுவேன். அதுல குறிப்பா லக்‌ஷ்மினு ஒரு மாடு. அத சின்ன கன்னுக்குட்டிலேர்ந்து வளர்க்கிறா பாட்டி. அதுக்கு நானுனா ரொம்ப பிரியம். பாட்டி லக்‌ஷ்மிகிட்ட ’அய்யப்பன எழுப்பு’னு சொல்லிவிடுவா. கொல்லப் பக்கதிலேர்ந்து முன்னாடி வந்து என்ன கண்ணத்துல நக்கி எழுப்பும். லக்‌ஷ்மி ரொம்ப அழகா இருப்பா. செந்நிறமா இருக்கும் அவ உடம்பு. ஆனா முகத்துல அழகா கருப்பும் வெள்ளையும் பாக்க லட்சனமா இருப்பா. அவ எங்க இருந்தாலும் லெக்‌ஷ்மினு கூப்பிட்டா போதும் திரும்பி பார்ப்பா. எனக்கு அவக்கிட்ட பிடிச்சதே அந்த சொர சொர நாக்க வெச்சுக்கிட்டு நெத்தில நக்குவா. கூசும்.. இருந்தாலும் சொகமாயிருக்கும். அப்படி செஞ்சா தலமுடி நல்லா வளரும் எவனோ சொல்ல அவகிட்ட டெய்லி தலய காமிக்கிறது வழக்கமாகி போச்சு. பாட்டி எனக்கு கொடுத்த ஒரே வேலை, கடைக்கு போய் ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போயி வீட்டுக்கு தேவையானதும் புண்ணாக்கும் வாங்கிட்டு வர சொல்லுவா. முக்கியமான ஒன்ன சொல்ல மறந்துட்டேன். லெக்‌ஷ்மி என்னையும் பாட்டியையும் மட்டும்தான் கிட்ட விடுவா. சித்தப்பா கிட்டப் போன மிரளுவா. மத்தவங்கள முட்டுவா. கழனித் தொட்டில புண்ணாக்கப் போட்டு கிளறிவிட்டுக்கிட்டே தண்ணி காட்டணும். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலையது. ஒவ்வொரு மாடா காட்டணும். லெக்‌ஷ்மிக்கு மட்டும் ஸ்பெஷல். நான் கொஞ்சம் தனியா எடுத்து வெச்சிருப்பேன். அவளுக்கு என் கையால கொடுப்பேன். திண்ணுட்டு கைய நல்லா நக்குவா. இன்னும் வேணும்னு தலையையும் காலையும் உதைச்சு கேப்பா. இப்ப நெனச்சாலும் மனசுக்கு நிறைவாயிருக்கு.

எட்டாவது முடிச்சு கோடைக்குப் பாட்டி வீட்டுக்கு போனப்ப பாட்டி வூட்ல லெக்‌ஷ்மி மட்டும்தான் இருந்தா. இன்னொரு கறவை மாடு இல்ல. பாட்டிய கேட்டேன். `கொஞ்சம் பண தேவைப் பட்டுச்சு. வித்துட்டோம்டா பேராண்டி’னா. ’நீ பக்கத்து வீட்டுக்கு  போயி பால் வாங்கிட்டு வா. காஃப்பி போடுத் தர்றேன்’னு சொன்னா. எப்பவும் பால் வித்துத்தான் பாட்டிக்கு பழக்கம். இந்த தடவ பால் வாங்கிட்டு வானு சொன்னது எனக்கு வித்தியாசமா இருந்திச்சு. இந்த தடவ லெக்‌ஷ்மி வளர்ந்து பெருசா தெரிஞ்சா. ’ஏன் பாட்டி, லெக்‌ஷ்மி பால தரமாட்டாளா”னு கேட்டேன். `அவ இப்பத்தான் மொத மொத செனையா இருக்கா. நீ வந்துட்டேல. அழகான கன்னுக்குட்டி ஒன்னு தருவா. அப்புறம் அவளே பால் தருவா’னு சொன்னா. எனக்கு கொஞ்சம் புரிஞ்சது மாதிரி தெரிஞ்சாலும், புரியாததுதான் அதிகம். லெக்‌ஷ்மிய பாக்க பாவாமியிருந்துச்சு. செல்லமா தடவிக் கொடுத்தேன். அவ வழக்கம் போல தலைய நக்கிவிட்டு பாசமா இருந்தா. நான் வந்ததுக்குப்புறம் லெக்‌ஷ்மி ரொம்ப சந்தோஷமாயிருக்கானு பாட்டி சொல்லிக்கிட்டே இருந்தா.

பாட்டி வீட்டு பெட்ரூம்லேர்ந்து பார்த்தா கொல்லபக்கம் நல்லா தெரியும். லெக்‌ஷ்மிய ஜன்னல் பக்கத்துலயே கட்டிப் போட்டு எப்ப கன்னு போடுவானு பாக்குறது வழக்கமா போச்சு. பாட்டி, ‘டேய்ய் அவளை பாத்துக்கிட்டே இருக்காதே. கண்ணு பட்ரும். நீ போயி வெளையாடு. நான் கன்னு போட்டதும் சொல்றேன்’ சொல்லிக்கிட்டே இருந்தா. இரண்டு வாரமாச்சு. சித்தாப்பாகிட்ட, பாட்டிக்கிட்ட, வேலைக்கு வர்றவங்க கிட்டனு எல்லாரையும் நச்சரிச்சுக்கிட்டே இருந்தேன். அவகிட்டயே கேட்டேன். அவளுக்கு சொல்லத் தெரியல.

ஒரு நாள் மதியான நேரம் நல்லா உச்சி வெயிலு பொளந்து கட்டுது. அப்பப் பாத்து லெக்‌ஷ்மி கத்த ஆரம்பிச்சுட்டா. தூங்கிட்டு இருந்த பாட்டிய எழுப்பி, ‘பாட்டி, லெக்‌ஷ்மி கன்னு போட போறானு நெனக்கிறேன். வா வந்து பாரு. பயமாயிருக்கு’னு சொன்னேன். சித்தப்பா வேற இல்ல. பாட்டி வந்து பாத்துட்டு, ‘நீ போ உள்ள. இதெல்லாம் நீ பாக்கக் கூடாது’னு சொல்லிட்டா. இருந்தாலும் ஜன்னல் வழியா பாத்துக்கிட்டே இருக்கேன். லக்‌ஷ்மி உட்கார்றா, படுக்கிறா, எழுந்திருக்கிறா, கத்துறா.. இதையே திரும்ப திரும்ப பண்ணிக்கிட்டே இருக்கா. அதுக்குள்ள சித்தப்பா வந்து சேற எனக்கு தெம்பு வந்திருச்சு. அவர பாத்ததும் அம்ம்மானு கத்தினா லெக்‌ஷ்மி. அவளுக்கு தெரியும் போல யாரு உதவுவாங்கனு. சித்தப்பாவும், பாட்டியும், இன்னு ரெண்டு வேலையாளுங்களும் பத்திரமா கன்னுக்குட்டிய வெளிய எடுத்தாங்க. யாரோ ஒருத்தரு, ‘கடாவா கடேரியா’னு கேக்க.. ‘கடேரி’னு சித்தப்பா சொன்னாரு. அதெல்லாம் என்னான்னு அப்ப புரியல. கன்னுக்குட்டிய முச்சு விட வெக்க அது மூக்குக்குள்ள என்னமோ பண்ணினாங்க. அதுவும் மூச்சு விட ஆரம்பிச்சுச்சு. கன்னுக்குட்டிய லெக்‌ஷ்மிகிட்ட விட்டுட்டாங்க. குட்டி லெக்‌ஷ்மிய நக்கிக்கிட்டே செல்லமா ஏதோ சொல்லிக்கிட்டே இருக்கா லெக்‌ஷ்மி. குட்டி லெக்‌ஷ்மி மெல்ல எழுந்திரிச்சு அம்மாக்கிட்ட போய் பால் குடிக்க ஆரம்பிச்சுட்டா. பாட்டி சித்தப்பாவ பக்கத்துல விடுறா.. மத்தவங்கள பக்கத்துல ஒரு அடிக் கூட விடல. நான் பக்கத்துல போயி பாக்கலாம்னா பாட்டி விட மாட்டேனுட்டா. நான் அடம் புடிக்க, சித்தப்பா கிட்டக் கூட்டிக்கிட்டு போனாரு.

லக்‌ஷ்மி என்னை ஒன்னும் செய்யல. அவ தலைய தடவிக் கொடுத்தேன். நிமிர்ந்து பாத்தவ தலைய கீழ போட்டு குட்டிய நக்கிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. எனக்கு ஒரு பக்கம் குட்டிக் கன்னுக்குட்டிய பாத்த சந்தோஷம். ஆனா லக்‌ஷ்மி இப்படி மாறுவானு நெனக்கவே இல்ல. பாட்டிக் கிட்ட ’ஏன் பாட்டி இப்படி பண்றா’னு கேட்டேன். ‘அடேய்.. அவளுக்கு மொத புள்ளடா. அவள பாத்துட்டு பால ஊட்டிட்டு உன்ன பாப்பாளாக்கும்’னு சொன்னா. நாலு நாள் ஆச்சு. லக்‌ஷ்மி சந்தோஷமாத்தான் இருந்தா. ஆனா என்னவோ தெரியல முன்ன மாதிரி இல்லைனு எனக்கு தோணுச்சு.

நாலு நாளா யோசிச்சு யோசிச்சு படுத்தவனுக்கு அன்னிக்கு நல்லா தூங்கிட்டேன். காலைல யாரோ நக்குறது போல இருந்துச்சு. எழுந்திருச்சு பாக்குறேன்.. குட்டி லெட்சுமிய்ய்ய்ய். ரெண்டு நிமிஷம் பக்கத்துல இருந்து விளையாடினவ, துள்ளி குதிச்சு அம்மாகிட்ட போயிட்டா. சந்தோஷமா கொல்லபக்கம் போனா.. லக்‌ஷ்மி என்னைப் பாத்ததும் கால உதைச்சுக்கிட்டு தலைய வேகமா மேலும் கீழும் ஆட்டினா. சந்தோஷமா கூப்பிட்டா. குட்டி லெக்‌ஷ்மி பால் குடிச்சிக்கிட்டு இருந்த நேரம், என் தலைய வழக்கம் போல தன் சொர சொர நாககால தடவிக் கொடுத்தா. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.. எனக்கு ரெண்டு குட்டிக்கு ரெண்டு.